search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    கோவை:

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றிய அரசு டாக்டர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். 

    இந்த நிலையில் கோவை வெள்ளியங்கிரியை சேர்ந்த 28 வயது வாலிபர், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், வெள்ளலூரை சேர்ந்த 29 வயது பெண், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, 24 வயது பெண் என 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு கொசுவை ஒழிக்கும் வகையில் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
    Next Story
    ×