என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆதரவற்றோருக்கு 12-வது நாளாக உணவு வழங்கிய ரெயில்வே போலீசார்
Byமாலை மலர்9 April 2020 5:07 AM GMT (Updated: 9 April 2020 5:07 AM GMT)
எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளிலில் ஆதரவின்றி சாலையோரங்களில் தஞ்சம் அடைந்திருப்பவர்களின் பசியை போக்கும் பணியில் சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், சிறு, குறு தொழில் செய்வோர், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலர் அத்தியாவசிய வீட்டு தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தநிலையில் எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளிலில் ஆதரவின்றி சாலையோரங்களில் தஞ்சம் அடைந்திருப்பவர்களின் பசியை போக்கும் பணியில் சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 12-வது நாளாக நேற்றும் ஆதரவற்றோருக்கு உணவு, தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.
இந்த உணவுகளை எழும்பூர் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு எட்வர்டு தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார். மேலும் அவர் ஆதரவற்றோருக்கு ஆடைகளும் வழங்குகிறார். நாள் ஒன்றுக்கு 50 முதல் 70 பேருக்கு உணவுகளை வழங்கிவரும் அவர், நேற்று முன்தினம் மட்டும் 125 பேரின் பசியை போக்கி உள்ளார். இவரது செயலை தினமும் காணும் அப்பகுதி மக்கள், இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், சிறு, குறு தொழில் செய்வோர், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலர் அத்தியாவசிய வீட்டு தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தநிலையில் எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளிலில் ஆதரவின்றி சாலையோரங்களில் தஞ்சம் அடைந்திருப்பவர்களின் பசியை போக்கும் பணியில் சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 12-வது நாளாக நேற்றும் ஆதரவற்றோருக்கு உணவு, தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.
இந்த உணவுகளை எழும்பூர் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு எட்வர்டு தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார். மேலும் அவர் ஆதரவற்றோருக்கு ஆடைகளும் வழங்குகிறார். நாள் ஒன்றுக்கு 50 முதல் 70 பேருக்கு உணவுகளை வழங்கிவரும் அவர், நேற்று முன்தினம் மட்டும் 125 பேரின் பசியை போக்கி உள்ளார். இவரது செயலை தினமும் காணும் அப்பகுதி மக்கள், இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X