என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததை உறுதி செய்வது எப்படி?- டாக்டர்கள் விளக்கம்
Byமாலை மலர்9 April 2020 4:52 AM GMT (Updated: 9 April 2020 4:52 AM GMT)
கொரோனாவால் பாதிப்பை உறுதி செய்ய எத்தனை முறை ரத்த பரிசோதனை எடுக்கப்படுகிறது என்பது குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை:
கொரோனாவால் பாதிப்பை உறுதி செய்ய எத்தனை முறை ரத்த பரிசோதனை எடுக்கப்படுகிறது என்பது குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து கோவை ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-
கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுபவர்களுக்கு முதலில் ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகிறது. அவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு அதில் கொரோனா தொற்று உறுதியானால் மட்டுமே அவர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த சிகிச்சையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகாவிட்டாலும் (நெகட்டிவ்) அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்புவதில்லை. 2 நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும்.
அதிலும் அவருக்கு உறுதியாகவில்லை (நெகட்டிவ்) என்றால் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார். எனவே ஒருவருக்கு 2 முறை நடத்தும் பரிசோதனையின்போது உறுதியில்லை என்று தெரியவந்தால் மட்டுமே அவர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். வீட்டுக்கு சென்றாலும் அவர் 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கொரோனாவால் பாதிப்பை உறுதி செய்ய எத்தனை முறை ரத்த பரிசோதனை எடுக்கப்படுகிறது என்பது குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து கோவை ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-
கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுபவர்களுக்கு முதலில் ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகிறது. அவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு அதில் கொரோனா தொற்று உறுதியானால் மட்டுமே அவர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த சிகிச்சையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகாவிட்டாலும் (நெகட்டிவ்) அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்புவதில்லை. 2 நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும்.
அதிலும் அவருக்கு உறுதியாகவில்லை (நெகட்டிவ்) என்றால் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார். எனவே ஒருவருக்கு 2 முறை நடத்தும் பரிசோதனையின்போது உறுதியில்லை என்று தெரியவந்தால் மட்டுமே அவர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். வீட்டுக்கு சென்றாலும் அவர் 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X