என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ பணியாளர்களுக்காக திருப்பூரில் தயாராகும் கவச உடைகள்
Byமாலை மலர்4 April 2020 5:34 AM GMT (Updated: 4 April 2020 5:34 AM GMT)
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக கவச உடைகள் திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்சுக்கும் நோய் தொற்று ஏற்படும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவ பணியாளர்கள் கவச உடை அணிந்துதான் கொரோனா நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதற்காக பிரத்யேகமாக கவச உடைகள் அதிக அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்து தற்போது கவச உடைகள் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். திருப்பூர் ஏற்றுமதி நிறுவனத்தில் தற்போது கவச உடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதாவது கொரோனா வார்டில் அணியப்படும் கவச உடையின் பெயர் ‘கோவிட் 19 பாடி மாஸ்க் கோட்’ ஆகும். முதல்கட்டமாக 10 ஆயிரம் கவச உடைகளை தயாரிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆர்டர் கொடுத்துள்ளது. .
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் எஸ்.எஸ்.லோகநாதன் கூறியதாவது:-
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, பிரத்யேக உடை தயாரிக்கும் ஆர்டரை எங்களுக்கு வழங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக உடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். வழக்கமான உடை தயாரிப்பு போன்று தான் இந்த பணியும். ஆனால் வழங்கப்பட்டிருக்கும் நான் ஓவன் மெட்டீரியல், எந்திரத்தில் வெட்டும்போது எளிதில் சூடாகிவிடும். இதனால் அவை எளிதில் ஒட்டிக்கொள்ளும்.
எந்திரத்தில் வெட்டும்போது மிகுந்த கவனத்துடன் வெட்ட வேண்டி உள்ளது. தைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், தைக்கும் வளாகம் என அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பேணப்படுகிறது. மிகவும் மெலிதாக இருப்பதால், அழுத்தி தைத்தால் கிழிந்து விடும். பக்குவமாக கையாண்டு தைக்கிறோம். இதற்காக நாள்தோறும் 50 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு ஆயிரம் உடைகள் தைத்துக் கொண்டிருக்கிறோம். 10 நாட்களில் இந்த ஆர்டரை முடித்து விடுவோம்.
தற்போது கூடுதலாக 30 ஆயிரம் உடைகளுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. இந்த ஆர்டரையும் விரைவாக முடித்து கொடுத்து விடுவோம். இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்சுக்கும் நோய் தொற்று ஏற்படும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவ பணியாளர்கள் கவச உடை அணிந்துதான் கொரோனா நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதற்காக பிரத்யேகமாக கவச உடைகள் அதிக அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்து தற்போது கவச உடைகள் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். திருப்பூர் ஏற்றுமதி நிறுவனத்தில் தற்போது கவச உடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதாவது கொரோனா வார்டில் அணியப்படும் கவச உடையின் பெயர் ‘கோவிட் 19 பாடி மாஸ்க் கோட்’ ஆகும். முதல்கட்டமாக 10 ஆயிரம் கவச உடைகளை தயாரிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆர்டர் கொடுத்துள்ளது. .
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் எஸ்.எஸ்.லோகநாதன் கூறியதாவது:-
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, பிரத்யேக உடை தயாரிக்கும் ஆர்டரை எங்களுக்கு வழங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக உடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். வழக்கமான உடை தயாரிப்பு போன்று தான் இந்த பணியும். ஆனால் வழங்கப்பட்டிருக்கும் நான் ஓவன் மெட்டீரியல், எந்திரத்தில் வெட்டும்போது எளிதில் சூடாகிவிடும். இதனால் அவை எளிதில் ஒட்டிக்கொள்ளும்.
எந்திரத்தில் வெட்டும்போது மிகுந்த கவனத்துடன் வெட்ட வேண்டி உள்ளது. தைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், தைக்கும் வளாகம் என அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பேணப்படுகிறது. மிகவும் மெலிதாக இருப்பதால், அழுத்தி தைத்தால் கிழிந்து விடும். பக்குவமாக கையாண்டு தைக்கிறோம். இதற்காக நாள்தோறும் 50 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு ஆயிரம் உடைகள் தைத்துக் கொண்டிருக்கிறோம். 10 நாட்களில் இந்த ஆர்டரை முடித்து விடுவோம்.
தற்போது கூடுதலாக 30 ஆயிரம் உடைகளுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. இந்த ஆர்டரையும் விரைவாக முடித்து கொடுத்து விடுவோம். இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X