என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்3 April 2020 7:40 AM GMT (Updated: 3 April 2020 7:40 AM GMT)
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த மாலில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் வேலைபார்த்த ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி அந்த மாலில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஊழியர்களையும் தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த (மார்ச்) மாதம் 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் தங்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் 044-25384520, 044-46122300 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களும் உடனடியாக தங்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் வேலைபார்த்த ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி அந்த மாலில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஊழியர்களையும் தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த (மார்ச்) மாதம் 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் தங்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் 044-25384520, 044-46122300 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களும் உடனடியாக தங்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X