என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை - நெல்லை மேலப்பாளையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு
Byமாலை மலர்3 April 2020 3:04 AM GMT (Updated: 3 April 2020 3:04 AM GMT)
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நெல்லை மேலப்பாளையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஊர் எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மேலப்பாளையம் பகுதிக்கு வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் பலர் வருவதால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநாட்டில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த 16 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவ குழுவினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா வார்டில் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை அங்குள்ள தனிமை வார்டில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் அந்த 16 பேரின் குடும்பத்தினரும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள ஒரு கல்லூரியில் தனிமையில் தங்குவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் சுகாதார பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அறிவித்தார். இதையடுத்து ஊருக்குள் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. தெற்கு புறவழிச்சாலையில் இருந்து அம்பை செல்லும் சாலை இரும்பு தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது. அதேபோல் மேலப்பாளையம் குறிச்சி சாலை, கருங்குளம் சாலை, டவுன் சாலை ஆகியவையும் மூடப்பட்டன. அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஊர் எல்லையை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவியாக பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலப்பாளையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மேலப்பாளையம் பகுதிக்கு வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் பலர் வருவதால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநாட்டில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த 16 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவ குழுவினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா வார்டில் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை அங்குள்ள தனிமை வார்டில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் அந்த 16 பேரின் குடும்பத்தினரும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள ஒரு கல்லூரியில் தனிமையில் தங்குவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் சுகாதார பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அறிவித்தார். இதையடுத்து ஊருக்குள் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. தெற்கு புறவழிச்சாலையில் இருந்து அம்பை செல்லும் சாலை இரும்பு தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது. அதேபோல் மேலப்பாளையம் குறிச்சி சாலை, கருங்குளம் சாலை, டவுன் சாலை ஆகியவையும் மூடப்பட்டன. அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஊர் எல்லையை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவியாக பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலப்பாளையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X