என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பராமரிப்பு சோதனைக்காக பயணிகள் இல்லாமல் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது
Byமாலை மலர்2 April 2020 10:05 AM GMT (Updated: 2 April 2020 10:05 AM GMT)
தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 2 மெட்ரோ ரெயில்கள் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனையின் போது பயணிகள் யாருக்கும் அனுமதி இல்லை.
சென்னை:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயில் சேவை கடந்த 24-ந்தேதி நிறுத்தப்பட்டது.
2 வழித்தடத்திலும் இயக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை நிறுத்தப்பட்டு நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில் ஒரு சில மெட்ரோ ரெயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. காலையில் ஒரு ரெயிலும், மாலையில் ஒரு ரெயிலும் பயணிகள் இல்லாமல் இயக்கப்படுகிறது.
சென்ட்ரல்-கோயம்பேடு வழியாக விமான நிலையம், வண்ணாரப்பேட்டை- அண்ணாசாலை வழியாக விமானநிலையம் ஆகிய 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மெட்ரோ ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மெட்ரோ ரெயில் சேவை கட்டமைப்புகளை தினமும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
தண்டவாளம், ரெயில் செயல்பாடு, கதவுகள் திறப்பு உள்ளிட்ட அனைத்து இயக்க பணிகளும் முறையாக செயல்படுகிறதா? என்பதை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 2 மெட்ரோ ரெயில்கள் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனையின் போது பயணிகள் யாருக்கும் அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயில் சேவை கடந்த 24-ந்தேதி நிறுத்தப்பட்டது.
2 வழித்தடத்திலும் இயக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை நிறுத்தப்பட்டு நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில் ஒரு சில மெட்ரோ ரெயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. காலையில் ஒரு ரெயிலும், மாலையில் ஒரு ரெயிலும் பயணிகள் இல்லாமல் இயக்கப்படுகிறது.
சென்ட்ரல்-கோயம்பேடு வழியாக விமான நிலையம், வண்ணாரப்பேட்டை- அண்ணாசாலை வழியாக விமானநிலையம் ஆகிய 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மெட்ரோ ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மெட்ரோ ரெயில் சேவை கட்டமைப்புகளை தினமும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
தண்டவாளம், ரெயில் செயல்பாடு, கதவுகள் திறப்பு உள்ளிட்ட அனைத்து இயக்க பணிகளும் முறையாக செயல்படுகிறதா? என்பதை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 2 மெட்ரோ ரெயில்கள் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனையின் போது பயணிகள் யாருக்கும் அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X