என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை சரகத்தில் தடையை மீறிய 2 ஆயிரத்து 266 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்1 April 2020 9:46 AM GMT (Updated: 1 April 2020 9:46 AM GMT)
கோவை சரகத்தில் தடையை மீறி வெளியே சென்றவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 266 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
கோவை:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தடையை மீறி வெளியே செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெளியே செல்பவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் காரணம் இல்லாமல் வெளியே செல்பவர்களுக்கு நூதன தண்டனைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை சரக பகுதியில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் தடையை மீறி வெளியே சென்றதாக ஏராளமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் கூறியதாவது:-
கோவை சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் தடையை மீறி வெளியே சென்றதாக நேற்று வரை 3,206 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 2,266 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களுக்கு கோர்ட்டில் அபராதம் செலுத்திய பின்னரே எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாநகர பகுதியில் நேற்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. பல இடங்களில் கூட்டமாக நின்று பேசுவதை பார்க்க முடிந்தது. ஆனால் போலீசார் அவர்களை கண்டுகொள்ளவில்லை. சில இடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் போலீசார் சரிவர கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
எனவே காரணம் இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், வீட்டின் அருகே உள்ள சாலையில் கூட்டமாக நின்று பேசுவதை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தடையை மீறி வெளியே செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெளியே செல்பவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் காரணம் இல்லாமல் வெளியே செல்பவர்களுக்கு நூதன தண்டனைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை சரக பகுதியில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் தடையை மீறி வெளியே சென்றதாக ஏராளமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் கூறியதாவது:-
கோவை சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் தடையை மீறி வெளியே சென்றதாக நேற்று வரை 3,206 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 2,266 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களுக்கு கோர்ட்டில் அபராதம் செலுத்திய பின்னரே எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாநகர பகுதியில் நேற்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. பல இடங்களில் கூட்டமாக நின்று பேசுவதை பார்க்க முடிந்தது. ஆனால் போலீசார் அவர்களை கண்டுகொள்ளவில்லை. சில இடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் போலீசார் சரிவர கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
எனவே காரணம் இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், வீட்டின் அருகே உள்ள சாலையில் கூட்டமாக நின்று பேசுவதை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X