search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு பண்டகசாலைகளில் குறைந்த விலையில் காய்கனி விற்பனை

    ஊரடங்கு உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு பண்டகசாலைகளில் குறைந்த விலையில் காய்கனி விற்பனை செய்யப்பட்டது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திலீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி பொதுமக்களின் அன்றாட பணிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் அறிவுரை களின்படி பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் விற்பனை சங்கங்களால் தொடங்கப்பட்ட நடமாடும் பண்ணை பசுமை காய் கனி கடைகள் மூலம் காய்கனிகள் மற்றும் பலசரக்கு பொருட்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு மக்களின் தேவைக்கேற்ப குறைந்த விலையில் சரியான எடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் விற்பனை சங்கங்களால் நடத்தப்படும் நடமாடும் பண்ணை பசுமை கடைகள் மூலம் காய்கனிகளை பொது மககள் குறைந்த விலையில் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×