என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு
Byமாலை மலர்1 April 2020 5:12 AM GMT (Updated: 1 April 2020 5:12 AM GMT)
ரேஷன் கடை விற்பனையாளர்களையும், பாக்கெட் கட்டுகிறவர்களையும் ஊக்குவிப்பதற்காக, விற்பனையாளர்களுக்கு ரூ.2,500-ம், பாக்கெட் கட்டுவோருக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை:
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு பொருட்களை வழங்க ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள், அலுவலக வேலை நேரத்தைத் தாண்டியும், விடுமுறை நாளிலும் பணியாற்றுகிறார்கள்.
மேலும், நிவாரணத் தொகையாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவக்கூடிய சூழ்நிலையில் உயிரை பணயம் வைத்து அரசு உத்தரவை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர்களையும், பாக்கெட் கட்டுகிறவர்களையும் ஊக்குவிப்பதற்காக, விற்பனையாளர்களுக்கு ரூ.2,500-ம், பாக்கெட் கட்டுவோருக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு பொருட்களை வழங்க ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள், அலுவலக வேலை நேரத்தைத் தாண்டியும், விடுமுறை நாளிலும் பணியாற்றுகிறார்கள்.
மேலும், நிவாரணத் தொகையாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவக்கூடிய சூழ்நிலையில் உயிரை பணயம் வைத்து அரசு உத்தரவை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர்களையும், பாக்கெட் கட்டுகிறவர்களையும் ஊக்குவிப்பதற்காக, விற்பனையாளர்களுக்கு ரூ.2,500-ம், பாக்கெட் கட்டுவோருக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X