search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    முத்துப்பேட்டை அருகே ரூ.2ž லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

    முத்துப்பேட்டை அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ.2ž லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த விளாங்காடு சமத்துவபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் அரசு மதுபானபாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவலின்படி அப்பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் வீட்டை சுற்றிவளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த செல்வகுமார் அங்கிருந்து தப்பி தலைமறைவானார். பின்னர் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டை சுற்றிலும் சோதனை நடத்தியதில் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு கொட்டாகையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் ஏராளமான அட்டை பெட்டிகளில் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அங்கிருந்து 45 அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் 2.50லட்சம் மதிப்புள்ள 2160 மது பாட்டில்களை பறிமுதல் செய்து முத்துப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார் தப்பி சென்ற செல்வகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×