search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    கொரோனா மருத்துவ வசதிக்கு ரூ.1 கோடி நிதி உதவி- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

    காங்கிரஸ் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரோனா மருத்துவ வசதிக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூபாய் 1 கோடி வழங்குது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் வழங்கப்பட இருக்கிற நிதியை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக உடனடியாக வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அதேபோல தமிழக சட்டமன்றத்தில் உள்ள 7 காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கணிசமான தொகையினை வழங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×