என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10, 12-ஆம் வகுப்புகளிலும் தமிழில் படித்திருந்தால்தான் அரசுப் பணியில் முன்னுரிமை- மசோதா தாக்கல்
Byமாலை மலர்16 March 2020 6:33 AM GMT (Updated: 16 March 2020 6:33 AM GMT)
10 மற்றும் 12-ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை:
தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்க அவசியம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது.
அதில் பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி அரசுப்பணியில் வழக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X