search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    10, 12-ஆம் வகுப்புகளிலும் தமிழில் படித்திருந்தால்தான் அரசுப் பணியில் முன்னுரிமை- மசோதா தாக்கல்

    10 மற்றும் 12-ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    சென்னை: 

    தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும்  வகையில் சட்டம் உள்ளது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்க அவசியம் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில், இந்த இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. 

    அதில் பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். 

    இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி அரசுப்பணியில் வழக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
    Next Story
    ×