search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருண்குமார்
    X
    அருண்குமார்

    சிங்காநல்லூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது

    கோவை சிங்காநல்லூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவிடம், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த ராமநாதபுரம் கணேசபுரம் சடையப்பர் கோவில் வீதியை சேர்ந்த அருண்குமார்(35) என்பவர் அடிக்கடி சந்தித்து பேசி வந்தார்.

    பின்னர் அருண்குமார், அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று பேசி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அருண்குமார் யாரும் இல்லாதை அறிந்து திடீரென மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து வேறு யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அருண்குமார் மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

    அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே கோபமடைந்த மாணவி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். பின்னர் இந்த வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×