என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர்கபில் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
Byமாலை மலர்12 March 2020 4:58 AM GMT (Updated: 12 March 2020 4:58 AM GMT)
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வாணியம்பாடியில் உள்ள அமைச்சர் நிலோபர்கபில் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் கடந்த 21 நாட்களாக ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி தலைவர் நாசீர்கான் தலைமையில் குடியுரிமை சட்ட திருத்ததை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ஆற்றுமேடு பகுதியில் உள்ள கடைகளை அடைத்துவிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்களுடன் சுமார் 50 மாணவர்களும் திடீரென போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அங்கு பேசிய நிர்வாகிகளில் பலர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் வாணியம்பாடியில் உள்ள அமைச்சர் நிலோபர்கபில் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் கடந்த 21 நாட்களாக ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி தலைவர் நாசீர்கான் தலைமையில் குடியுரிமை சட்ட திருத்ததை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ஆற்றுமேடு பகுதியில் உள்ள கடைகளை அடைத்துவிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்களுடன் சுமார் 50 மாணவர்களும் திடீரென போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அங்கு பேசிய நிர்வாகிகளில் பலர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் வாணியம்பாடியில் உள்ள அமைச்சர் நிலோபர்கபில் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X