search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் சோதனை நடத்தி விட்டு வந்த போலீசார்.
    X
    சிறையில் சோதனை நடத்தி விட்டு வந்த போலீசார்.

    மதுரையில் இன்று மத்திய சிறையில் அதிரடி சோதனை

    மதுரை மத்திய சிறையில் பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் கைதிகளிடையே போதை பொருட்கள், செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சிறையில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் அரசியல் வழக்கில் கைதானவர்கள் என பலரும் உள்ளனர். இவர்கள் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறையில் பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் கைதிகளிடையே போதை பொருட்கள், செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சிறையில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் 200 போலீசார் அதிரடியாக மத்திய சிறைக்கு சென்றனர். அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சிறையில் உள்ள கழிப்பறை, குளியல் அறை, சமையல் அறை என அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. காலை 7.15 மணிவரை இந்த சோதனை நடைபெற்றது.

    Next Story
    ×