என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்6 March 2020 4:10 AM GMT (Updated: 6 March 2020 5:14 AM GMT)
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று 105.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 105 அடியானது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அன்று காலை 183 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 3-ந்தேதி 1663 கன அடியானது.
பின்னர் நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 433 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 182 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று 105.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 105 அடியானது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அன்று காலை 183 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 3-ந்தேதி 1663 கன அடியானது.
பின்னர் நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 433 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 182 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று 105.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 105 அடியானது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X