என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோசடி வழக்கில் சிறப்பு கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஆஜர்
Byமாலை மலர்3 March 2020 7:40 AM GMT (Updated: 3 March 2020 7:40 AM GMT)
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் இன்று செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
சென்னை:
2011 முதல் 2015 வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகியோர் மட்டும் ஆஜராகினர். சகாய ராஜன் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவிற்காக ஒத்திவைத்தார்.
2011 முதல் 2015 வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகியோர் மட்டும் ஆஜராகினர். சகாய ராஜன் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவிற்காக ஒத்திவைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X