என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் தி.மு.க.-அ.தி.மு.க. பிரமுகர்கள் வீடு, கடைகளில் வருமானவரி சோதனை
Byமாலை மலர்3 March 2020 6:19 AM GMT (Updated: 3 March 2020 6:19 AM GMT)
ஆரணியில் தி.மு.க., அ.தி.மு.க. பிரமுகர் வீடு, கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி:
ஆரணி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அன்வர்பாஷா, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது வீடு மற்றும் 3 கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
வேலூர் வருமான வரித்துறையினர் 8 பேர் கொண்ட குழுவினர் அலுவலர் பூரான்சன்பீனா தலைமையில் நேற்று மாலை ஆரணிக்கு திடீரென வந்தனர்.
அன்வர்பாஷா வீடு மற்றும் கடைகளில் மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்தது. 2-வது நாளாக இன்று காலையிலும் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஆரணி காந்தி ரோட்டில் நகர அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளரும், ஆவின் துணைத் தலைவருமான பாரிபாபு என்பவரின் கடையிலும், அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த கணக்கு பதிவேட்டு புத்தகங்களை எடுத்து கொண்டனர்.
ஆரணியில் கடந்த வாரம் பட்டுசேலை தயாரிப்பாளர்கள் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அன்வர்பாஷா, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது வீடு மற்றும் 3 கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
வேலூர் வருமான வரித்துறையினர் 8 பேர் கொண்ட குழுவினர் அலுவலர் பூரான்சன்பீனா தலைமையில் நேற்று மாலை ஆரணிக்கு திடீரென வந்தனர்.
அன்வர்பாஷா வீடு மற்றும் கடைகளில் மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்தது. 2-வது நாளாக இன்று காலையிலும் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஆரணி காந்தி ரோட்டில் நகர அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளரும், ஆவின் துணைத் தலைவருமான பாரிபாபு என்பவரின் கடையிலும், அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த கணக்கு பதிவேட்டு புத்தகங்களை எடுத்து கொண்டனர்.
ஆரணியில் கடந்த வாரம் பட்டுசேலை தயாரிப்பாளர்கள் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X