என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொய் கூறுவதே நாராயணசாமிக்கு வாடிக்கை- கிரண்பேடி கடும் தாக்கு
புதுச்சேரி, மார்ச். 2-
புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
மத்திய கப்பல் போக்கு வரத்துத்துறை அமைச்சர் மன்சுக்மாண்டேவியா புதுவைக்கு வந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி, விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவித்தார்.
காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் செல்ல 3 மணி நேரமாகும். இலங்கையிலிருந்து அதிகளவு பயணிகள் காரைக்கால் திருநள்ளாறு கோவிலுக்கு வருகின்றனர். கப்பல் போக்குவரத்து தொடங்கினால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக் கும் என நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
காரைக்கால் துறைமுகத் தில் தனியார் நிறுவனம் சரக்கு போக்குவரத்து இயக்கி வருகிறது. அங்கிருந்து தனியாரே பயணிகள் கப்பல் போக்குவரத்தையும் இயக்க தயாராக உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் இந்த கப்பல் போக்குவரத்திற்கு கவர்னர் முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவும், மத்திய அரசுக்கு கவர்னர் தடை ஏற்படுத்த கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறினார்.
இத்தகவல் இன்று அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. இந்த செய்திகளை சுட்டிக்காட்டி கவர்னர் கிரண்பேடி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
காரைக்காலில் இருந்து கப்பல் போக்குவரத்து தொடங்க நானும் மத்திய மந்திரியிடம் பரிந்துரை செய்திருந்தேன். கப்பல் போக்குவரத்து தொடங்க பயணிகளிடம் இமிகிரேஷன் சோதனை நடத்தப்பட வேண்டும், உளவுப்பிரிவு, கடத்தல் தடுப்பு பிரிவு, போக்குவரத்து ஆகியவற்றை யும் ஒரே நேரத்தில் ஏற்படுத்த வேண்டும்.
தலைமை செயலர் தலைமையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு தேவைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் சிலர் நாள்தோறும் பொய்களை மட்டுமே கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
கவர்னர் தடை ஏற்படுத்துவ தாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார், அவர் நாள்தோறும் பொய் சொல்கிறார் என்பதையே கவர்னர் கிரண்பேடி மறைமுகமாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்