என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண் குளிப்பதை செல்போனில் ரகசியமாக படம் எடுத்த வாலிபர்
Byமாலை மலர்28 Feb 2020 2:52 PM GMT (Updated: 28 Feb 2020 2:52 PM GMT)
பூதப்பாண்டி அருகே இளம்பெண் குளிப்பதை செல்போனில் ரகசியமாக படம் எடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ என்ற ஜீவா (வயது 22).
இளங்கோ வீடு அருகே ஒரு இளம்பெண், கணவருடன் வசித்து வந்தார். தினமும் அவர் வீட்டிற்கு பின்புறம் குளிப்பது வழக்கம். கடந்த 26-ந் தேதி அவர் குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றார்.
அங்கு குளித்து கொண்டிருந்த போது, வீட்டின் பின்பக்க மதில் சுவர் அருகே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே அந்த பெண், மதில் சுவர் அருகே சென்று அந்த பொருளை பார்த்தார். அது ஒரு ரகசிய காமிரா என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த காமிரா மூலம் யார் படம் எடுக்கிறார்கள் என்று பார்த்தார்.
அப்போது பக்கத்து வீட்டு இளங்கோ, தனது செல்போனில் ரகசிய காமிரா பொருத்தி இளம்பெண் குளித்ததை படம் எடுத்ததை கண்டுபிடித்தார்.
இதனை அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். அவர் இது பற்றி இளங்கோவிடம் கேட்டார். அதற்கு அவர், இளம்பெண்ணை தகாத வார்த்தைகள் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதையடுத்து அந்த பெண் பூதப்பாண்டி போலீசில் சம்பவம் குறித்து புகார் செய்தார். அதில் இளங்கோ தான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் எடுத்து மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி இளங்கோ மீது இந்திய தண்டனை சட்டம் 354 (சி), 294 பி, 506 (1) மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66 -ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர். போலீசார் தேடுவதை அறிந்ததும் இளங்கோ தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ என்ற ஜீவா (வயது 22).
இளங்கோ வீடு அருகே ஒரு இளம்பெண், கணவருடன் வசித்து வந்தார். தினமும் அவர் வீட்டிற்கு பின்புறம் குளிப்பது வழக்கம். கடந்த 26-ந் தேதி அவர் குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றார்.
அங்கு குளித்து கொண்டிருந்த போது, வீட்டின் பின்பக்க மதில் சுவர் அருகே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே அந்த பெண், மதில் சுவர் அருகே சென்று அந்த பொருளை பார்த்தார். அது ஒரு ரகசிய காமிரா என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த காமிரா மூலம் யார் படம் எடுக்கிறார்கள் என்று பார்த்தார்.
அப்போது பக்கத்து வீட்டு இளங்கோ, தனது செல்போனில் ரகசிய காமிரா பொருத்தி இளம்பெண் குளித்ததை படம் எடுத்ததை கண்டுபிடித்தார்.
இதனை அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். அவர் இது பற்றி இளங்கோவிடம் கேட்டார். அதற்கு அவர், இளம்பெண்ணை தகாத வார்த்தைகள் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதையடுத்து அந்த பெண் பூதப்பாண்டி போலீசில் சம்பவம் குறித்து புகார் செய்தார். அதில் இளங்கோ தான் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் எடுத்து மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி இளங்கோ மீது இந்திய தண்டனை சட்டம் 354 (சி), 294 பி, 506 (1) மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66 -ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர். போலீசார் தேடுவதை அறிந்ததும் இளங்கோ தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X