என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரலாறுகள் மறைக்கப்படுகின்றன- தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
Byமாலை மலர்28 Feb 2020 3:22 AM GMT (Updated: 28 Feb 2020 3:22 AM GMT)
வரலாறுகள் மறைக்கப்படுகின்றன என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.
புதுச்சேரி:
தேச பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அமைப்பு மற்றும் புதுவை பல்கலைக்கழகம் சார்பில் சகோதரத்துவத்துக்கான 3 நாள் கருத்தரங்கு புதுவையில் தொடங்கியது. இதன் தொடக்கவிழா அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கருத்தரங்கை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இ்ந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பழங்காலந்தொட்டே வர்த்தகம், கலாசாரம் குறித்து தொடர்புகள் இருந்துள்ளது.
ஆனால் வரலாறு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதை மீட்டு உருவாக்கம் செய்வது அவசியமானது. தவறான தகவல் தொடர்புகளால் தமிழகத்திலும் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனின் பெருமை பரவியுள்ளது. அதனால்தான் தற்போதைய அரசு மகாராஷ்டிர துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டியுள்ளது.
தமிழகத்தில் எதிர்ப்பு பிரசாரமே அதிகமாக உள்ளது. சில சக்திகள் நமது வரலாற்றை மறைத்து உள்ளன. அதை மீட்டு உருவாக்க வேண்டும்.
தமிழகத்தின் மகளாகிய நான் தெலுங்கானாவின் கவர்னராக உள்ளேன். இதற்காக பெருமை கொள்கிறேன்.
புதுவை கவர்னர் கிரண்பேடி பேசும்போது, பழங்காலத்தில் புதுச்சேரியில் இருந்த சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும், கடல் வணிகத்துக்கு சான்றாக விளங்கிய அரிக்கன்மேட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படுவதாகவும், ஆன்மிக சுற்றுலாவுக்கு புதுவையில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங், தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஆர்.என்.சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தேச பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அமைப்பு மற்றும் புதுவை பல்கலைக்கழகம் சார்பில் சகோதரத்துவத்துக்கான 3 நாள் கருத்தரங்கு புதுவையில் தொடங்கியது. இதன் தொடக்கவிழா அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கருத்தரங்கை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இ்ந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பழங்காலந்தொட்டே வர்த்தகம், கலாசாரம் குறித்து தொடர்புகள் இருந்துள்ளது.
ஆனால் வரலாறு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதை மீட்டு உருவாக்கம் செய்வது அவசியமானது. தவறான தகவல் தொடர்புகளால் தமிழகத்திலும் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனின் பெருமை பரவியுள்ளது. அதனால்தான் தற்போதைய அரசு மகாராஷ்டிர துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டியுள்ளது.
தமிழகத்தில் எதிர்ப்பு பிரசாரமே அதிகமாக உள்ளது. சில சக்திகள் நமது வரலாற்றை மறைத்து உள்ளன. அதை மீட்டு உருவாக்க வேண்டும்.
தமிழகத்தின் மகளாகிய நான் தெலுங்கானாவின் கவர்னராக உள்ளேன். இதற்காக பெருமை கொள்கிறேன்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி பேசும்போது, பழங்காலத்தில் புதுச்சேரியில் இருந்த சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும், கடல் வணிகத்துக்கு சான்றாக விளங்கிய அரிக்கன்மேட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படுவதாகவும், ஆன்மிக சுற்றுலாவுக்கு புதுவையில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங், தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஆர்.என்.சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X