search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் வீரராகவராவ்
    X
    கலெக்டர் வீரராகவராவ்

    மூன்றாம் பாலினத்தவர்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் வீரராகவராவ் அறிவிப்பு

    மூன்றாம் பாலினத்தவர்களை கவுரவிக்கும் விதமாக மாநில அரசு விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகராவ் அறிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    சமூக நலத்துறையின் மூலம் ஏதேனும் ஒரு துறையில் தனித்தன்மையுடன் செயல்பட்டு சிறந்து விளங்கிய மூன்றாம் பாலினத்தவர்களை கவுரவிக்கும் விதமாக 2019-2020-ம் ஆண்டிற்கு மாநில அரசு விருது வழங்கப்பட உள்ளது.

    அதனடிப்படையில் மாவட்டத்தில் கடின உழைப்பாலும், ஏதேனும் ஒரு துறையில் தனித்துவத்துடன் செயல்பட்டு சாதனை செய்து சிறந்த மூன்றாம் பாலினர் என்று பெயர் பெற்றவராகவும், தன்னம்பிக்கையுடன் அயராது உழைத்து தனித்து நின்று குறைந்தது 5 நபர்களுடன் கூட்டுத் தொழில் செய்து சிறந்து விளங்கும் மூன்றாம் பாலினர் மேற்காணும் விருது பெறுவதற்கு சுயவிபரம் கொண்ட கருத்துருவுடன் விண்ணப்பிக்கலாம்.

    இது தொடர்பான கூடுதல் விபரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரிடையாகவும், 04567-230466 என்ற தொலை பேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி 28-ந்தேதி ஆகும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×