என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி அருகே ஆண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை
Byமாலை மலர்25 Feb 2020 4:46 AM GMT (Updated: 25 Feb 2020 4:46 AM GMT)
அவினாசி அருகே குடும்ப தகராறு காரணமாக ஒரு வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
அவினாசி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவர் அவினாசி அடுத்துள்ள பெரியாயிபாளையம் ஜே.ஜே. நகரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி துர்கா (28). திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று பிரபாகரன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த துர்கா தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை கட்டிலிலும், துர்கா தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவினாசி போலீசுக்கும் துர்காவின் கணவருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் அவினாசி டி.எஸ்.பி. பாஸ்கர், இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு வந்தனர். தாய், குழந்தை ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனம் உடைந்த துர்கா தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணமாகி 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அவினாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவர் அவினாசி அடுத்துள்ள பெரியாயிபாளையம் ஜே.ஜே. நகரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி துர்கா (28). திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று பிரபாகரன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த துர்கா தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை கட்டிலிலும், துர்கா தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவினாசி போலீசுக்கும் துர்காவின் கணவருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் அவினாசி டி.எஸ்.பி. பாஸ்கர், இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு வந்தனர். தாய், குழந்தை ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனம் உடைந்த துர்கா தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணமாகி 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அவினாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X