search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம்
    X
    திருமணம்

    மதுரையில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர் காதலியை கரம் பிடித்தார்

    மதுரையில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர் தனது காதலியை சட்டப்படி மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார்.
    மதுரை:

    நாமக்கல்லைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகள் பவித்ரா. இவர் அங்குள்ள கல்லூரியில் படிக்கும்போது ஈரோட்டைச் சேர்ந்த விஷ்ணுபிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. தோழிகளான இருவரும் 4 வருடம் நெருங்கி பழகினர். இவர்களது நட்புக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில் விஷ்ணு பிரியா ஆணாக மாறி தனது பெயரை விஷ்வந்த் என மாற்றிக் கொண்டார். இதையடுத்த பவித்ராவை பெண் கேட்டு சென்றுள்ளார்.

    அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பவித்ரா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் விஷ்வந்த்தும், பவித்ராவும் ஈரோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

    தொடர்ந்து மதுரை வந்த அவர்கள் திருநங்கை பாரதி கண்ணம்மாவை சந்தித்து தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு கேட்டனர்.

    இந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மையத்திற்கு விஷ்வந்த்- விஷ்ணுபிரியா மற்றும் பாரதிகண்ணம்மா வந்தனர்.

    தொடர்ந்து சார்பு நீதிபதி, வக்கீல் மோகன்தாஸ் முன்னிலையில் விஷ்வந்த், பவித்ராவை சட்டப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். புதுமண ஜோடிகளுக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    சட்டப் பணிகள் ஆணைக்குழு மையத்தில் நடந்த திருமணத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×