search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்பிற்கு கைத்தறி ஆடை தயாரித்த பொள்ளாச்சி முதியவர் விஸ்வநாதன்.
    X
    டிரம்பிற்கு கைத்தறி ஆடை தயாரித்த பொள்ளாச்சி முதியவர் விஸ்வநாதன்.

    டிரம்பிற்கு கைத்தறி ஆடை தயாரித்து அனுப்பிய பொள்ளாச்சி முதியவர்

    இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கைத்தறி ஆடை தயாரித்து பொள்ளாச்சி முதியவர் அனுப்பி வைத்துள்ளார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (90). தையல் கலைஞர். இவர் கடந்த 1949-ம் ஆண்டில் இருந்து பொள்ளாச்சி மற்றும் வேட்டைக்காரன் புதூரில் தையல் கலைஞராக இருந்து வருகிறார்.

    மேலும் ஆண்கள், பெண்களுக்கு இலவசமாக தையல் கலை பயிற்சியும் அளித்து வருகிறார். இவர் இந்தியா மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள், பிரபலமானவர்களுக்கு இலவசமாக கைத்தறியில் ஆடை தயாரித்து வழங்கி வருகிறார்.

    தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர், நடிகர் சிவாஜிகணேசன் ஆகியோருக்கு கைத்தறி ஆடைகள் வழங்கி உள்ளார். இதுதவிர முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் ஆகியோருக்கு கைத்தறி ஆடை தயாரித்து அனுப்பி வைத்துள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோருக்கு கைத்தறி ஆடை தைத்து அனுப்பி வைத்து உள்ளார்.

    தற்போது இந்திய வர உள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இந்தியாவின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கைத்தறியில் ஆடை தயாரித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    விஸ்வநாதனுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது வேட்டைக்காரன் புதூரில் தனது இளைய மகனுடன் வசித்து வருகிறார்.
    Next Story
    ×