search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குக்கர்
    X
    குக்கர்

    தருமபுரியில் ஓட்டலில் குக்கர் வெடித்து மாணவிகள் படுகாயம்

    தருமபுரியில் இன்று காலை ஓட்டலில் குக்கர் வெடித்து சிதறியதில் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவிகள் மீது பட்டது. இதில் வலியால் அவர்கள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி பஸ் நிலையம் அருகே பென்னாகரம் மெயின் ரோடு இந்தியன் வங்கியின் அருகே ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலை இன்று காலை வழக்கம் போல் கடை ஊழியர்கள் திறந்தனர். சமையல் செய்வதற்கு கடையின் வெளியே வைத்திருந்த கியாஸ் அடுப்பில் கறியை குக்கரில் வைத்து வேக வைத்தனர். அப்போது திடீரென குக்கர் வெடித்தது. இதில் குக்கரில் இருந்த சுடுநீர் சாலையில் பள்ளிக்கு நடந்த சென்ற மாணவிகள் மீது சிதறியது. 

    இதில் வலியால் அவர்கள் அலறினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவிகளை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் மாணவிகளுக்கு கை, கால், முகம் உள்ளிட இடங்களில் லேசான காயம் ஏற்பட்டது. ஓட்டலில் குக்கரில் விசில் அடிக்கும் போது கியாஸ் அடுப்பை அணைக்காததால் இந்த சம்பவம் நடந்தது என்று அந்த பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஓட்டலில் சமையல் செய்யும் போது ஊழியர்கள் கவனமாக கியாஸ் அடுப்பின் அருகிலேயே இருந்து கண் காணிக்கவேண்டும் என்று சமூகஆர்வலர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×