search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூங்குவது போல நடித்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சி
    X
    தூங்குவது போல நடித்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சி

    நோயாளிகளின் உறவினரிடம் செல்போன், பணம் கொள்ளை - தூங்குவது போல நடித்து கைவரிசை

    ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மர்ம நபர் ஒருவர் தூங்குவது போல நடித்து நோயாளிகளின் உறவினரிடம் செல்போன் மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை பகுதியை சேர்ந்தவர் பவானி. இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவரை பார்ப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த இறையூரை சேர்ந்த பவானியின் உறவினர் முருகன் உள்பட 5 பேர் வந்தனர்.

    இவர்கள் வார்டுக்கு வெளியே உறங்கியுள்ளனர். அதிகாலை 3 மணிக்கு தூக்கத்தில் இருந்த முருகனுக்கு அருகில் சென்று தூங்குவது போல் நடித்து பாக்கெட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர் திருடிச்சென்றார்.

    இந்த காட்சிகள் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது. இதுபற்றி முருகன் ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×