search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    புதுக்கோட்டையில் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி காசாளர் உல்லாசம்

    புதுக்கோட்டையில் வங்கியில் பணம் கட்ட வரும் பெண் வாடிக்கையாளர்களை வங்கி காசாளர் வாட்ஸ்அப் மூலம் காதல்வலையில் விழவைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் லூயிஸ்விக்டர். இவரது மனைவி லில்லிஹைடா. இவர்களது மகன் எட்வின் ஜெயகுமார் (வயது 36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் காசாளராக (கேசியர்) வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் இவருக்கும் தஞ்சை வல்லம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண்ணிற்கும் கடந்த 2019 டிசம்பர் மாதம் 2-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து எட்வின்ஜெயக்குமாருடன் மணப்பாறையில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தார். திருமணமானதில் இருந்து எட்வின் ஜெயக்குமார் தனது மனையிடம் நெருங்கி பழகாமல் ஒதுங்கியே இருந்து வந்துள்ளார்.

    வேலைக்கு சென்று இரவு வீட்டிற்கு தாமதமாகவே வந்துள்ளார். அதுமட்டுமின்றி வீட்டில் தனி அறைக்கு சென்று 15 செல்போன்களை வைத்துக் கொண்டு வாட்ஸ்அப்பில் குறுச்செய்தி அனுப்பியவாறு இருந்துள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த அவர் கணவரிடம் யாருடன் செல்போனில் ஆபாசமாக பேசுகிறீர்கள் என கேட்டதற்கு சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது மாமியார் லில்லிஹைடா, கணவரின் தங்கை கேத்ரின் நிர்மலா மற்றும் அவர்களது உறவுக்கார பெண் ரீட்டா ஆகியோரிடம் தெரிவித்தும் அவர்கள் எந்தவித பதிலும் செல்லாமல் அந்த பெண்ணை சத்தம் போட்டுள்ளனர்.

    ஒருநாள் இரவு எட்வின் ஜெயகுமார் தூங்கிய பின்பு அவரின் செல்போன்களை எடுத்து பார்த்த அவர் அதிர்ந்து போனார்.

    அதில் பல பெண்களுடன் அவர் உல்லாசத்தில் ஈடுபட்ட வீடியோக்கள், ஏராளமான பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதில் அவர் பணியாற்றும் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் பலரின் பாஸ்புக்குகளின் புகைப்படங்கள் இருந்தது. அவருக்கு துணையாக அதே வங்கியில் பணியாற்றும் தேவிபிலோமினா என்ற பெண் இருந்து வந்ததையும் தெரிந்து கொண்டார்.

    மேலும் சில பெண்களிடம் அவர் உல்லாசத்தில் ஈடுபட்டிருப்பதும், பல பெண்களிடம் அவர் உல்லாசத்தில் ஈடுபட வற்புறுத்தியதும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலம் அவருக்கு தெரியவந்துள்ளது.

    அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்று நிர்வாணமாக நின்று கொண்டு பல பெண்களுடன் வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசி வந்துள்ளதும், அதனை தனது செல்போனில் பதிவு செய்து பதிவிறக்கம் செய்துள்ளார்.

    அதேபோல் தன்னுடன் வங்கியில் வேலை பார்க்கும் பெண்கள், பெண் வாடிக்கையாளர்கள், தன்னுடைய வீட்டின் வெளியே வாசலை பெருக்கும் பெண்கள், மொட்டை மாடியில் துணி காயவைக்கும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக போட்டோக்களை எடுத்தும் வைத்துள்ளார்.

    அதில் ஒரு செல்போனில் ஒரு இளம்பெண் சுயநினைவின்றி படுத்து கிடப்பதும், அந்த பெண்ணின் காலடியில் ஒருவர் காலணி தெரிந்தவாறு நிற்கும் புகைப்படம் உள்ளது. அந்த பெண் சுயநினைவின்றி படுத்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எட்வின் ஜெயகுமாரின் மனைவிக்கு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தனது கணவரின் வீட்டாரிடம் புகார் அளிக்கலாம் என சென்ற அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது கணவரின் தாய் லில்லிஹைடாவும், அவரது உறவுக்கார பெண் ரீட்டாவும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனராம். இதனால் என்ன செய்வது என புரியாமல் தான் இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என நினைத்து கண்ணீர் வடித்தார்.

    தன்னுடைய தவறான செயல்பாடுகளை தனது மனைவி தெரிந்து கொண்டதை அறிந்து கொண்ட எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது வீட்டார் இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

    எட்வின்ஜெயக்குமாருடன் கள்ளத்தொடர்பில் உள்ள அவருடன் வங்கியில் பணியாற்றும் தேவி பிலோமினா, எட்வின் ஜெயகுமார் மனைவியிடம் உன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளோம். எங்களை பற்றி வெளியில் சொன்னால் உன் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டினராம்.

    இதுகுறித்து செல்போன் மூலம் தனது தந்தை மற்றும் அண்ணனுக்கு அந்த பெண் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் மகளின் கணவர் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டுள்ளனர்.

    இதையடுத்து தங்களை பற்றிய தகவலை வெளியில் சொன்னதால் எட்வின்ஜெயக்குமார் தனது குடும்பத்தார் உதவியுடன் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 1-ந்தேதி மலையேரிப்பட்டி என்ற ஆள்நடமாட்டம் இல்லாத மலைக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார்.

    உடனடியாக அந்த பெண் தனது வீட்டாருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கவே எட்வின் ஜெயக்குமார் அந்த பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

    அதேபோல் கடந்த மாதம் 3-ம் தேதி புத்தாநத்ததில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மீண்டும் மலையேரிப்பட்டிக்கு கட்டாயப்படுத்தி கூட்டிச்சென்றுள்ளார்.

    இதையடுத்து அந்த பெண் அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். காப்பாற்றும் படி கதறியுள்ளார். இதையடுத்து அவரை தஞ்சையில் உள்ள அவர்களது வீட்டிற்கு அந்த பெண்ணின் பெற்றோர் அழைத்து வந்தனர்.

    இதுகுறித்து தஞ்சை அருகே உள்ள வல்லம் அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் அளிக்க சென்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணின் புகாரை வாங்க மறுத்துள்ளனர். பின்னர் தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதனிடம் புகார் செய்தார்.

    அதனை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் வல்லம் போலீசார் எட்வின்ஜெயக்குமார், அவரது தாய் லில்லிஹைடா, சகோதரி கேத்தரின் நிர்மலாமேரி, ரீட்டா, தேவிபிலோமினா ஆகிய 5 பேர் மீது எளிதில் வெளியில் வரக்கூடிய சாதாரண வழக்காக பதிவு செய்தனர்.

    மனைவி புகார் அளித்ததை அறிந்த எட்வின்ஜெயக்குமார் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றார்.

    இதனால் எட்வின் ஜெயக்குமாரின் மனைவி தனது கணவரின் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை மதுரை நீதிமன்றத்தில் காண்பித்ததையடுத்து எட்வின்ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத மேலும் 2 வழக்குகளை பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்யுமாறு வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எட்வின்ஜெயக்குமார் உட்பட 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் காசாளர் காமலீலைகளில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×