search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை சட்டத்திற்கு எதிரான காத்திருப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்ட இஸ்லாமியர்களில் ஒரு பகுதி.
    X
    குடியுரிமை சட்டத்திற்கு எதிரான காத்திருப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்ட இஸ்லாமியர்களில் ஒரு பகுதி.

    முத்துப்பேட்டையில் 3-வது நாளாக தொடரும் முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்

    தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி முத்துப்பேட்டையில் 3-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம் தொடருகிறது.

    முத்துப்பேட்டை, பிப்.17-

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அணைத்து ஜமாஅத் மற்றும் அணைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இருக்கும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    3-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இன்றைக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் பேசுவதாக கூறப்படுகிறது. இந்த தொடர் போராட்டத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளதால் டிஎஸ்பி இனிகோ திவ்யன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதால் முத்துப்பேட்டையில் தஞ்சை டிஐஜி லோகநாதன், திருவாரூர் எஸ்பி துரை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    இந்தநிலையில் கோவையில் உள்ள ஆர்ஏஎப் என்ற மத்திய துணை ராணுவப்படையினர், ஆர்ஏஎப் டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் லிவிவிட்டோ, சப்இன்ஸ்பெக்டர் சத்தியா ஆகியோர் தலைமையில் வந்துள்ளனர். மேலும் அவர்கள் முக்கிய இடங்களில் ஆய்வு நடத்தினர். இந்த துணை ராணுவம் வருகையால் முத்துப்பேட்டையில் மேலும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. * * * போராட்டத்தை கட்டுப்படுத்த முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மத்திய துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள காட்சி. * * * முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான காத்திருப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்ட இஸ்லாமியர்களில் ஒரு பகுதி.

    Next Story
    ×