என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் 2 மாணவிகள் கடத்தல்- வாலிபர்கள் மீது புகார்
மதுரை:
மதுரை தெப்பக்குளம் புதுராமநாதபுரம் சாலை பாத்திமா ஜூம்மா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் வைஷ்ணவி (வயது20). தொலைதூர கல்வி மூலம் பி.காம். படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த வைஷ்ணவி வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் தெப்பக்குளம் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார்.
அதில், உறவினர் நவீன் சந்துருவுடன் வைஷ்ணவி பழகி வந்ததை கண்டித்ததாகவும், அதன் பிறகே அவர் மாயமாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் விராட்டிபத்து இருளாண்டி காலனியைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவரது மகள் சரசுவதி (21). இவர் ஆரப்பாளையத்தில் உள்ள போட்டி தேர்வு மையத்தில் படித்து வந்தார்.
அப்போது அங்கு படித்த தென்காசியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சரசுவதி மாயமாகி விட்டார்.
இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் செந்தூர்பாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்