search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பொள்ளாச்சியில் மாணவிகளை கர்ப்பிணியாக்கிய 2 வாலிபர்கள் கைது

    பொள்ளாச்சி அருகே மாணவிகளை கர்ப்பிணியாக்கிய 2 வாலிபர்கள் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரது மகன் ஷேக்பீர் என்கிற யாசிர் (வயது 20). ஆட்டோ டிரைவர். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    இதற்கிடையில் அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அவர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

    இதனால் அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமானார். இதையடுத்து தான் கர்ப்பமாக உள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு யாசிரிடம் அந்த மாணவி கூறியதாக தெரிகிறது.அதற்கு யாசிர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும், அதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். பின்னர் அந்த மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் யாசிர் மீது போக்சோ, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில் தலைமறைவாக இருந்த யாசிரை இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையிலான போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு யாசிர் வால்பாறை ரங்கசமுத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று யாசிரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம் பட்டியை சேர்ந்தவர் கணபதி. கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்தி திருமணம் செய்தார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று உறவினர்களிடம் கூறினர். இது குறித்து டாக்டர்கள் கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடமும் தகவல் தெரிவித்தனர்.

    குழந்தைகள் நல அலுவலர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கணபதியை நெகமம் பஸ் நிறுத்தத்தில் கைது செய்தனர்.
    Next Story
    ×