search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி படுகொலை - தந்தை, சித்தி கைது

    உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் மாடிப்படியிலிருந்து தள்ளி சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தந்தை சித்தியை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த ஆயர்பாடியை சேர்ந்தவர் சங்கர். இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வேலைக்காக சென்றார்.

    தனியார் கம்பெனியில் வேலை செய்யும்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த தஞ்சாவூரை சேர்ந்த பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சவுமியா (5) என்ற பெண் குழந்தை பிறந்தது.

    கருத்து வேறுபாடு காரணமாக சங்கரை பிரிந்து தாய் வீடான தஞ்சாவூருக்கு சென்று விட்டார். குழந்தை சவுமியாவை சங்கரிடமே விட்டுவிட்டு சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சங்கர், குழந்தையை தாத்தா பாபு வீட்டில் விட்டு வைத்திருந்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு சென்னை மதுரவாயலை சேர்ந்த சந்தியா (21) என்பவரை சங்கர் 2-வது திருமணம் செய்துகொண்டு வாலாஜா டோல்கேட் அருகில் உள்ள முசிறியில் குடும்பம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் ஆயர்பாடியில் தாத்தா பாபு வீட்டிலிருந்து சிறுமி சவுமியாவை கடந்த 10-ந்தேதி தன் வீட்டுக்கு சங்கர் அழைத்து சென்றார். மறுநாள் குழந்தை சவுமியா வாலாஜா அரசு மருத்துவமனையில் உடல் முழுவதும் காயங்களுடன் சேர்க்கப்பட்டார்.

    தாத்தா பாபு அங்கு வந்து டாக்டர்களிடம் விசாரித்தார். அதற்கு டாக்டர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசில் பாபு புகார் கொடுத்தார். என் பேத்தி சாவில் சந்தேகம் உள்ளது. அவள் உடல் முழுவதும் காயங்கள் இருக்கிறது என தெரிவித்திருந்தார். சங்கர், சந்தியா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சந்தியா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். எங்கள் உல்லாசத்துக்கு சிறுமி சவுமியா தடையாக இருந்தாள். அவள் வீட்டிலேயே சிறுநீர் மற்றும் இயற்கை உபாதையை கழித்து விடுகிறாள். இந்த ஆத்திரத்தில் சவுமியாவை கட்டையால் தாக்கி மாடிப்படியில் இருந்து கீழே பிடித்து தள்ளினோம்.

    படிக்கட்டில் இருந்த கூர்மையான பகுதி சவுமியாவின் நெஞ்சுக்குழியில் குத்திக்கொண்டது. மேலும் தலையிலும் பலமாக அடிபட்டு மயக்கமடைந்தாள்.

    உயிர் இருக்கிறது என்ற சந்தேகத்தில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, குழந்தை கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக டாக்டரிடம் தெரிவித்தோம். சவுமியாவை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதனால் தந்தை சங்கர், சித்தி சந்தியா ஆகியோரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×