என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை காதலர் தின கொண்டாட்டம்: மெரினா கடற்கரை-பூங்காக்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
Byமாலை மலர்13 Feb 2020 9:12 AM GMT (Updated: 13 Feb 2020 9:12 AM GMT)
காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை, பூங்காக்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
காதலர் தினம் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை, பூங்காக்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காதலர் தினம் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடற்கரை மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகள் அத்துமீறினால் அவர்களை பிடித்து திருமணம் செய்து வைப்போம் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இதனால் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும், பொது இடங்களில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்கும் வகையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இங்கு திரளும் காதல் ஜோடிகள் அத்துமீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காதல் ஜோடிகள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினாலோ அல்லது அவர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயன்றாலோ அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
காதலர் தினம் நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை, பூங்காக்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காதலர் தினம் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடற்கரை மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகள் அத்துமீறினால் அவர்களை பிடித்து திருமணம் செய்து வைப்போம் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இதனால் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும், பொது இடங்களில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்கும் வகையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இங்கு திரளும் காதல் ஜோடிகள் அத்துமீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காதல் ஜோடிகள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினாலோ அல்லது அவர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயன்றாலோ அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X