search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வில்லியனூரில் தொழில் நஷ்டம்- பெண் தற்கொலை

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் சுந்தர மூர்த்திபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 40). இவர் புதுவையில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (37). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். விஜயலட்சுமி வில்லியனூர் கோட்டைமேடு அருகே பால்பூத் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் பால்பூத்தை மூடி விட்டனர்.

    இதனால் விஜயலட்சுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். அவ்வப் போது தனது கணவர் பிரதீப்பிடம் பால்பூத்தை மறுபடியும் திறக்கலாம் என கூறி வந்தார். இதேபோல் நேற்றும் பிரதிப்பிடம் விஜயலட்சுமி கூறி உள்ளார். இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    திடீரென வீட்டின் அறையில் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரதீப் கதவை தட்டியுள்ளார். அவர் கதவை திறக்கவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது அங்குள்ள மின் விசிறியில் விஜயலட்சுமி துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.

    அதிச்சியடைந்த அவரது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விஜயலட்சுமியை மீட்டு வில்லியனூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்த பிரதீப் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×