என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மணவாளநகரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் திருவள்ளூர்-சென்னை சாலையில் நேற்று நள்ளிரவில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் டயர் பஞ்ச்சர் போடும் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்து இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்களை எடுத்தது.
பின்னர் அருகிலுள்ள செருப்புக் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 17ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் விலை உயர்ந்த செருப்புக்களை கொள்ளையடித்தனர்.
அதன் பின்னர் பேன்சி ஸ்டோர் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் ஷட்டரின் பூட்டை உடைக்க முடியாததால் அடுத்துள்ள மளிகைகடையின் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த மணவாளநகர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பெரியகுப்பம் பகுதியிலிருந்து ஆட்டோவை திருடிக்கொண்டு அங்கு வந்த மர்ம நபர்கள் இந்தகொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தகொள்ளைச் சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக்கொண்டு மணவளநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்