search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    குமுளி அருகே குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி

    குமுளி அருகே குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூணாறு:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி செல்லார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கச்சன் (வயது57). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி மோளி. இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று தங்கச்சன் தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள குளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    உடனே அவரை மீட்டு அணைக்கரைப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சன் எப்படி இறந்தார்? நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×