என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருமான வரி சோதனைக்கு பயந்து குடியுரிமை சட்டத்துக்கு ரஜினி ஆதரவு- கே.எஸ். அழகிரி
Byமாலை மலர்7 Feb 2020 4:35 AM GMT (Updated: 7 Feb 2020 4:35 AM GMT)
வருமான வரி சோதனைக்கு பயந்தே ரஜினிகாந்த் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சிகள் மட்டுமல்லாது உலக நாடுகளும் கண்காணித்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியுரிமை சட்டம் பற்றி தெரியாது.
வருமான வரி சோதனைக்கு பயந்தே அவர் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார். நடிகர் விஜய் தனது திரைப்படத்தில் அரசியல் குறித்து பேசியதால் வருமான வரித்துறையினர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி படப்பிடிப்பு தளத்தில் இருந்தவரை அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டுகின்றனர்.
எச்.ராஜா நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்றுதான் அழைப்பார். ஜோசப், முகமது என பெயர் வைத்திருப்பவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பேசக்கூடாதா? இதனை பார்க்கும் போது தமிழகத்தில் எச்.ராஜா சொல்வதைத்தான் அ.தி.மு.க. அரசு செய்து வருகிறதோ? என சந்தேகம் எழுகிறது.
இதனை தமிழக மக்கள் கண்டித்து வரும் தேர்தலில் அவர்களை புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சிகள் மட்டுமல்லாது உலக நாடுகளும் கண்காணித்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியுரிமை சட்டம் பற்றி தெரியாது.
வருமான வரி சோதனைக்கு பயந்தே அவர் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார். நடிகர் விஜய் தனது திரைப்படத்தில் அரசியல் குறித்து பேசியதால் வருமான வரித்துறையினர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி படப்பிடிப்பு தளத்தில் இருந்தவரை அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டுகின்றனர்.
எச்.ராஜா நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்றுதான் அழைப்பார். ஜோசப், முகமது என பெயர் வைத்திருப்பவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பேசக்கூடாதா? இதனை பார்க்கும் போது தமிழகத்தில் எச்.ராஜா சொல்வதைத்தான் அ.தி.மு.க. அரசு செய்து வருகிறதோ? என சந்தேகம் எழுகிறது.
இதனை தமிழக மக்கள் கண்டித்து வரும் தேர்தலில் அவர்களை புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X