என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மந்தவெளியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை
Byமாலை மலர்6 Feb 2020 9:08 AM GMT (Updated: 6 Feb 2020 9:08 AM GMT)
சென்னை மந்தவெளியில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி தற்போது தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி செந்தில்பாலாஜியின் வீட்டில் திடீரென மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது.
சென்னை மந்தவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு பூட்டி கிடந்ததால் போலீசார் சீல் வைத்தனர்.
இந்த வீட்டில் இன்று காலை போலீசார் சீலை உடைத்து உள்ளே புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி தற்போது தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி செந்தில்பாலாஜியின் வீட்டில் திடீரென மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது.
சென்னை மந்தவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு பூட்டி கிடந்ததால் போலீசார் சீல் வைத்தனர்.
இந்த வீட்டில் இன்று காலை போலீசார் சீலை உடைத்து உள்ளே புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X