search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எஸ்.பி வேலுமணி
    X
    அமைச்சர் எஸ்.பி வேலுமணி

    விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி - பொதுமக்கள் பாராட்டு

    கோவை அருகே விபத்தில் சிக்கியவர்களை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    கோவை:

    கோவையை அடுத்த மதுக்கரை போடிபாளையம் அருகே நேற்று இரவு வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் போடி பாளையத்தை சேர்ந்த பூபால் என்பவரும், ராஜபாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவரும் பலத்த காயமடைந்தனர்.

    அப்போது போடிபாளையத்தில் இருந்து மதுக்கரை நோக்கி அமைச்சர் எஸ்.பி வேலுமணி வந்து கொண்டிருந்தார்.வழியில் விபத்தில் சிக்கி 2 பேர் காயமடைந்து கிடப்பதைப் பார்த்ததும் காரை நிறுத்துமாறு அவர் டிரைவரிடம் கூறினார். பின்னர் காரில் இருந்து இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உதவினார்.
    மேலும் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்குமாறு டாக்டரிடம் கேட்டு கொண்டார். விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி உதவியதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாராட்டினார்கள்.
    Next Story
    ×