என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டையில் பஸ்களை சிறை பிடித்து மாணவ-மாணவிகள் சாலை மறியல்
Byமாலை மலர்4 Feb 2020 5:59 AM GMT (Updated: 4 Feb 2020 7:59 AM GMT)
உளுந்தூர்பேட்டையில் கல்லூரிக்கு செல்ல அரசு பஸ் வராததை கண்டித்து பஸ்களை சிறைபிடித்து மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா களமருதூர், கிளியூர், சேந்தநாடு, திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு இந்த கல்லூரிக்கு அரசு பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்சில் பஸ்பாஸ் வாங்கிய மாணவ-மாணவிகள் மட்டும் சென்று வருகிறார்கள்.
ஆனால், இந்த பஸ் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் வேறு வழியில் இயக்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் நேரடியாக உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் அண்ணாமலையிடம் புகார் செய்தனர். ஆனால் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்துக்குள் வந்து எந்த பஸ்களையும் அங்கிருந்து புறப்பட விடாமல் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதோடு அந்த வழியாக வந்த பஸ்களையும் சிறை பிடித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
காலை நேரத்தில் பள்ளிகளுக்கும், வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் அப்பந்தராஜ், உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குருபரன், ஜெயச்சந்திரன், தனிப்பிரிவு தலைமை ஏட்டு கொளஞ்சிராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகளிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் உடனே இங்கு வரவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அண்ணாமலை சம்பவ இடத்துக்கு விரைந்தார். இந்த பிரச்சனை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து பஸ் வரவழைக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை விலக்கி கொண்டனர். பின்னர் அங்கு வந்த பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் உளுந்தூர்பேட்டை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா களமருதூர், கிளியூர், சேந்தநாடு, திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு இந்த கல்லூரிக்கு அரசு பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்சில் பஸ்பாஸ் வாங்கிய மாணவ-மாணவிகள் மட்டும் சென்று வருகிறார்கள்.
ஆனால், இந்த பஸ் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் வேறு வழியில் இயக்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் நேரடியாக உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் அண்ணாமலையிடம் புகார் செய்தனர். ஆனால் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்துக்குள் வந்து எந்த பஸ்களையும் அங்கிருந்து புறப்பட விடாமல் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதோடு அந்த வழியாக வந்த பஸ்களையும் சிறை பிடித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
காலை நேரத்தில் பள்ளிகளுக்கும், வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் அப்பந்தராஜ், உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குருபரன், ஜெயச்சந்திரன், தனிப்பிரிவு தலைமை ஏட்டு கொளஞ்சிராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகளிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் உடனே இங்கு வரவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அண்ணாமலை சம்பவ இடத்துக்கு விரைந்தார். இந்த பிரச்சனை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து பஸ் வரவழைக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை விலக்கி கொண்டனர். பின்னர் அங்கு வந்த பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் உளுந்தூர்பேட்டை பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X