என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருநின்றவூரில் வாலிபர் வெட்டிக் கொலை
ஆவடி:
திருநின்றவூர், பெரியபாளையம் சாலை, வத்சனாபுரம் குடியிருப்பு பகுதியில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது.
சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்து காணப்பட்ட இந்த வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைந்து கிடந்தன. அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதனை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இன்று காலை அங்கு சென்ற ஒருவர் வீட்டுக்குள் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அம்பத்தூர் கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு தலை உள்பட உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். சிறிது தூரத்தில் ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவர் கருப்பு நிற சட்டையும், காவி நிற லுங்கியும் அணிந்திருந்தார்.
அவர் அதே பகுதியை சேர்ந்தவரா? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்