என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த மாணவர் கைது
Byமாலை மலர்1 Feb 2020 4:21 PM GMT (Updated: 1 Feb 2020 4:21 PM GMT)
குளச்சல் அருகே பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த மாணவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
குளச்சல்:
நாடு முழுவதும் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழகத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சைபர் கிரைம் போலீசாரின் துணையோடு குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோரை கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குளச்சல் அருகே பெத்தேல்புரம், கொடுமுட்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வாலிபர் பதிவிறக்கம் செய்த குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போன் மூலம் போலி பேஸ்புக் முகவரி தொடங்கி அதில் பரவ விட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசில் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் பரப்பியது பிபின் சுந்தர்ராஜ் (வயது 19) என கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பாலிடெக்னிக் மாணவர் ஆவார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 67 ஏ, 67 பி, தகவல் தொழில் நுட்ப சட்டம் 14(1) மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
நாடு முழுவதும் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழகத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சைபர் கிரைம் போலீசாரின் துணையோடு குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோரை கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குளச்சல் அருகே பெத்தேல்புரம், கொடுமுட்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வாலிபர் பதிவிறக்கம் செய்த குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போன் மூலம் போலி பேஸ்புக் முகவரி தொடங்கி அதில் பரவ விட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசில் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் பரப்பியது பிபின் சுந்தர்ராஜ் (வயது 19) என கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பாலிடெக்னிக் மாணவர் ஆவார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 67 ஏ, 67 பி, தகவல் தொழில் நுட்ப சட்டம் 14(1) மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X