search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழாவையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
    X
    மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழாவையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    குடியரசு தினவிழாவுக்கு 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

    தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் குடியரசு தினவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைசாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8-ந் தேதி கொல்லப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவிலை சேர்ந்த தவுபீக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அப்துல் சமீம் சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய தீவிரவாதி ஆவார். அவர் தனது கூட்டாளி தவுபீக்குடன் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. தவுபீக்கும் பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர் ஆவார்.

    அப்துல் சமீமின் மற்ற நண்பர்களான காஜா மொய்தீன், செய்யது நவாஸ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.

    அப்துல் சமீமும், தவுபீக்கும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பதுங்கி இருந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்துல் சமீம் உள்ளிட்ட பல தீவிரவாதிகளுக்கு கர்நாடகாவில் மேலும் பலர் அடைக்கலம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து கர்நாடக போலீசாரும், தமிழக கியூ பிரிவு போலீசாரும் அதிரடி வேட்டை நடத்தி தீவிரவாதிகளுக்கு உதவியதாக 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    தமிழகத்தில் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க 17-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வரும் தகவல்கள் பற்றியும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மெரினா கடற்கரை

    இந்த தீவிரவாதிகள் குடியரசு தினத்தன்று தமிழகம் முழுவதும் கோவில்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.

    1 லட்சம் போலீசார் ஏற்கனவே குடியரசு தின விழாவையொட்டி பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் இருப்பதால் குடியரசு தினவிழாவை யொட்டி நாளை (26-ந் தேதி) தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    Next Story
    ×