என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியாரை பற்றி தெரியாமல் ரஜினி உளறுகிறார்- ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து
சென்னை:
பெரியாரின் பேரனும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரியார் பற்றிய ரஜினியின் கருத்துக்கு இதுவரை பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். இன்று ரஜினியின் சர்ச்சை பேச்சுக்கு அவர் பதிலளித்தார். அப்போது கூறியதாவது:-
நினைத்தாலே இனிக்கும் சினிமாவில் நடித்த போது ரஜினி மனநிலை பாதிக்கப்பட்டார். அப்போது நடுத்தெருவில் பத்திரிக்கையாளர்களை கூட தாக்கினார்.
மனநிலை பாதிப்புக்காக சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். அந்த சிகிச்சையை முழுமையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர் பெரியார் பற்றி உளறி இருக்கிறார்.
தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ பெரியார் தான் காரணம் என்பதை அவர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
பெரியார் ஆயிரம் விஷயங்கள் செய்து இருப்பார். ஆயிரம் கருத்துக்களை சொல்லி இருப்பார். மக்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு தேவைற்றதை விட்டு விடலாம்.
பெரியாரை முழுமையாக கொச்சைப்படுத்துவது தமிழர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்