என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து
Byமாலை மலர்23 Jan 2020 6:11 AM GMT (Updated: 23 Jan 2020 6:11 AM GMT)
தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
மதுரை:
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.பி.எஸ். சகோதரர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆவின் விதிகளின்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும், தற்காலிக அல்லது நிரந்தர நிர்வாகக் குழுவை அமைப்பதுபற்றி ஆவின் ஆணைய தலைவர் முடிவு எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆவின் விதிகளை மீறி ஓ.ராஜா மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதாகவும், தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுகவினரை மட்டும் நியமித்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.பி.எஸ். சகோதரர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆவின் விதிகளின்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும், தற்காலிக அல்லது நிரந்தர நிர்வாகக் குழுவை அமைப்பதுபற்றி ஆவின் ஆணைய தலைவர் முடிவு எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X