search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் விசுவநாதன்
    X
    நத்தம் விசுவநாதன்

    மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது- நத்தம் விசுவநாதன் பேச்சு

    திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது. அவருடைய முதலமைச்சர் கனவு பலிக்காது என்று நத்தம் விசுவநாதன் பேசியுள்ளார்.

    நத்தம்:

    நத்தம் காந்தி கலையரங்கம் முன்பாக நத்தம் தொகுதி அதிமுக சார்பாக எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டமும் நடந்தது.

    இதற்கு ஒன்றிய செயலாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.நகர் செயலாளர் சிவலிங்கம், பேரவை நகர் செயலாளர் சேக்தாவூது, மாவட்ட பேரவை இணைச் செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் உத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராசு வரவேற்றார்.

    கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளரும், நத்தம் யூனியன் சேர்மனுமான கண்ணன், நகர்பொருளாளர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி மோகன்பாபு, முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சேக்ஒலி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 

    முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது,

    எத்தனை நூற்றாண்டு ஆனாலும் எம்.ஜி.ஆரின் கொள்கைகளும், பெருமைகளும், தொண்டுகளும் மக்கள் மனதை விட்டு மாறாது. எம்.ஜி.ஆரின் முகத்தை காட்டினாலே தம்பி உனக்காக ஓட்டு விழும் என்று அறிஞர் அண்ணாவே கூறியிருக்கிறார். திமுகவில் குடும்ப ஆட்சிதான் நடைபெறும். மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் ஆட்சியை திறம்பட தொடர்ந்து நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது. அவருடைய முதலமைச்சர் கனவு பலிக்காது. குடியுரிமை சட்ட திருத்தம் யாரையும் பாதிக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    முடிவில் முன்னாள் நகர அவைத் தலைவர் கருப்பையா நன்றி கூறினார்.

    Next Story
    ×