search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பொன்னேரி அருகே குடிசை வீட்டில் தீ - ரூ.1000 பணத்தை எடுக்க சென்ற தொழிலாளி பலி

    பொன்னேரி அருகே தீப்பிடித்த குடிசை வீட்டில் ரூ.1000 ரூ பணத்தை எடுக்க சென்ற தொழிலாளி உடல் கருகி பலியானார்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது70). தொழிலாளி.

    நேற்று மாலை அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவரது மனைவி வெளியில் சென்று இருந்தார். அப்போது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது நெருப்பை அணைக்காமல் விட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் குடிசையில் நெருப்பு பரவி பற்றி எரிந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் வீட்டில் உள்ள ரூ.1000 பணத்தை எடுத்து வருவதற்காக சுப்பிரமணி மீண்டும் குடிசை வீட்டுக்குள் சென்றார். இதில் அவர் தீயில் சிக்கி உடல் கருகினார்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து சுப்பிரமணியை மீட்டனர். உயிருக்கு போராடிய அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×