என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்- நாராயணசாமி அறிவிப்பு
Byமாலை மலர்21 Jan 2020 4:03 AM GMT (Updated: 21 Jan 2020 4:03 AM GMT)
புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசாக இருந்தாலும், மத்திய அரசின் நிறுவனமாக இருந்தாலும் மாநிலத்தில் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுத்த முடியாது.
அதனை மத்திய அரசு புறக்கணித்து மாநில அரசுகளை உதாசீனம் செய்கிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
ஏற்கனவே இந்த திட்டத்திற்கு எதிராக புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசாக இருந்தாலும், மத்திய அரசின் நிறுவனமாக இருந்தாலும் மாநிலத்தில் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுத்த முடியாது.
அதனை மத்திய அரசு புறக்கணித்து மாநில அரசுகளை உதாசீனம் செய்கிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
ஏற்கனவே இந்த திட்டத்திற்கு எதிராக புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X