search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைப்பற்றப்பட்ட குழந்தை - குழந்தையை கடத்தி வந்த தீபக்மண்டல்
    X
    கைப்பற்றப்பட்ட குழந்தை - குழந்தையை கடத்தி வந்த தீபக்மண்டல்

    சென்னையில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு - வடமாநில வாலிபர் கைது

    சென்னையில் இருந்து 2 வயது பெண் குழந்தையை கடத்தி வந்த வாலிபர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
    திண்டுக்கல்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அசார்அலி-மெர்ஜினா. கணவன் மனைவியான இவர்கள் மெரினாவில் பலூன் வியாபாரம் பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது.

    நேற்று முன்தினம் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒரு பெண் அவர்களிடம் வந்து உங்கள் குழந்தையை சினிமாவில் நடிக்க வைத்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    பின்னர் அவர்களுக்கு செலவுக்கு பணம் கொடுத்து விட்டு குழந்தையை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளார். குழந்தைக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா? என சோதனை செய்து விட்டு வருவதாக கூறி சென்றவர் திடீரென மாயமானார்.

    இதனையடுத்து தனது குழந்தைய கடத்தி சென்றதை உணர்ந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    குழந்தையை தூக்கிக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒரு பெண் நடந்து வருவதுபோன்ற சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து குழந்தையை வேறு ஊருக்கு கடத்தி விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதனையடுத்து அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி, 2 வயது குழந்தையுடன் சந்தேகப்படும்படியாக யாரேனும் வருகிறார்களா? என சோதனை நடத்தப்பட்டது. திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு ஒரு வாலிபர் குழந்தையுடன் இறங்கினார். திண்டுக்கல் ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் தனியாக அழைத்து விசாரித்ததில் குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் மிதுனப்பூரை சேர்ந்த தீபக் மண்டல் (32) என தெரிய வந்தது. இவர் வேலைக்காக சென்னை வந்தவர்.

    அப்போது ஒரு பெண்ணுன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையை கடத்தி எடுத்து வந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    குழந்தையை மீட்ட போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×